10TH TAMIL - கம்பராமாயணம் Kambaramayanam - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, September 29, 2025

10TH TAMIL - கம்பராமாயணம் Kambaramayanam

 

கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைபடுபவர் = பாரதியார்.
  • “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று கூறியவர் = பாரதியார்.
  • கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
  • இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • இது ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  • “ஆற்றுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “நாட்டுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “கங்கைப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கங்கை காண் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கும்பகருணன் வதைப் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்.
  • கம்பராமாயணத்தில் கூறப்படும் நதி = சரயு நதி.
  • “காலனுக்கு தூதரானவர்” என கம்பர் குறிப்பிடுவது = இராமனை.
  • “வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்

கம்பராமாயணம் – நூல் அமைப்பு

  • காண்டம் = 6
  • படலம் = 113
  • மொத்த பாடல்கள் = 10569
  • முதல் படலம் = ஆற்றுப்படலம்
  • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்

காண்டங்கள்

  • பால காண்டம்
  • அயோத்தியாகாண்டம்
  • ஆரண்யகாண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்தகாண்டம்
  • ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் = கம்பர்
  • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி
  • தேரழுந்தூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
  • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
  • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
  • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
  • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
  • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆசிரியரின் சிறப்பு பெயர்

  • கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான்
  • கம்பநாடுடைய வள்ளல்
  • சந்த வேந்தர்
  • தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்

இவரின் படைப்புகள்

  • ஏர் எழுபது
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்
  • சரஸ்வதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)

கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்

  • கம்பசித்திரம்
  • கம்பநாடகம்
  • தோமறுமாக்கதை
  • மானுடம் பாடும் காவியம்
  • இயற்கை பரிணாமம்
  • தமிழர் கவித்துவத்தின் பேரெல்லை
  • முற்காலக் காப்பியங்களை எல்லாம் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழர் உள்ளதை தேக்கி வாய்த்த புகழ் உடையது = கம்பராமாயணம்

கம்பராமாயண சிறப்புகள்

  • மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்.
  • வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
  • வ.வே.சு ஐயர் = பெருங்காப்பிய இலக்கணத்தில் உலகக் காப்பியங்களை எல்லாம் கம்பராமாயணம் வென்றுவிட்டது
  • வையாபுரி பிள்ளை = கம்பன் காவியம் தமிழரின் கவித்துவத்தின் பேரெல்லை
  • எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
  • பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
  • பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
  • கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
  • கவிமணி = கம்பன் கவியே கவி
  • “கல்வியிற் பெரியவர் கம்பர்”
  • “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
  • “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
  • “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
  • தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் = தமிழுக்கு கதியாவர் இருவர்; ககரத்தை கம்பர் என்றும், திகரத்தை திருவள்ளுவர் என்றும் கூறுகிறார்
  • 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
  • சந்த வேந்தர் எனப்படும் கம்பர், தனது கம்பராமாயணத்தில் 460க்கும் மேற்பட்ட சந்தங்களை பயன்படுத்தி உள்ளார்
  • கம்பராமாயணத்தில் ஒவ்வொரு 22 பாடல்களுக்கு ஒருமுறை, சந்தத்தை வேறுபடுத்தி பாடியுள்ளார் கம்பர்
  • காக்கும் பெருமாள் = கம்பர் ஒரே பாடலுக்காகச் சந்ததி மாற்றவும் செய்துள்ளார்
  • “கம்பராமாயணம் பெண் நடையுடையது” என்றவர் = கா.சு.பிள்ளை

பொதுவான குறிப்புகள்

  • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
  • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
  • கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
  • வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
  • கமபராமாயணம் ஒரு வழி நூல்
  • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
  • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
  • கம்பராமாயணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விருத்தம் = கலி விருத்தம்
  • கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
  • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
  • இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
  • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் (10569 பாடல்கள்)
  • கம்பனுக்கு முன்பு இருந்த தமிழ் இராமாயணங்கள் = இராமாயண வெண்பா, சைன ராமாயணம்
  • கம்பராமாயணத்தோடு ஒப்பிடப்படும் உலகக் காப்பியம் = இலியட் (ஹோமர்)
  • உலக அரங்கில் தமிழுக்கு உயரிய மதிப்பைப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் = திருக்குறளும் கம்பராமாயணமும் ஆகும்

மேற்கோள்

  • தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
  • எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
  • இல்லாரும் இல்லை உடையாரும்
  • இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
  • அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
  • இன்று போய் நாளை வா
  • வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
  • வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
  • உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
  • கை வண்ணம் அங்குக் கண்டேன்
  • கால் வண்ணம் இங்குக் கண்டேன்
  • அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா